இலங்கையில் பாலியல் தொழில் அதிகரிப்பு
பாலியல் தொழில் அதிகரிப்பு
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையினால் பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலை நாடி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த மாதத்தில் மாத்திரம் பாலியல் தொழில் 30 வீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில் இழப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்கள் பெரும் கஷ்டங்களையும் வறுமையையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இலங்கையர்களில் பலரும் உணவு மற்றும் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள தினமும் போராடி வருகின்றனர். அத்துடன், ஆடைத்தொழிற்சாலைகளில் பணிப்புரிந்து வந்த அதிகளவான பெண்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
தற்காலிக பாலியல் தொழில் விடுதிகள் உருவாக்கம்
இதனால் தற்காலிக பாலியல் தொழில் விடுதிகள் உருவாகியுள்ளதுடன் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறும் நிலைமை உருவாகி இருப்பதாக பாலியல் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement என்ற நிறுவனம் இந்திய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில்களை இழந்துள்ள பெண்கள், பாலியல் தொழிலாளிகளாக வருமானத்தை ஈட்டி வருவதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை கூறியுள்ளது.