தடுப்பூசி வழங்கும் விடயத்தில் இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
Corona
Vaccine
World Health Organization
SriLanka
By Chanakyan
இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமைக்கு இலஙடகையினை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை வரையில் நாட்டு மக்களில் ஒரு கோடி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் நேற்றைய தினம் வரையில் 2 கோடி 48 லட்சத்து 3 ஆயிரத்து 998 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 101 பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.