உலக சாதனை படைத்த மலையக இளைஞர்கள் -குவியும் பாராட்டுகள்(படங்கள்)
ஹட்டன் ரஞ்சித் ராஜபக்ச தோட்டத்தைச் சேர்ந்த 07 இளைஞர்களும் இரண்டு (31) யுவதிகளும் தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இணைந்து கொண்டனர்.
ஹப்புத்தளை, லிதுல மெரயா, அகரபதன, மிகமுவ மற்றும் டயகம ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் குழு 16-26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 09 பேர் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள நடன பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினர் தெரிவித்தனர்.
24 மணிநேரம் நடனம்

சோழன் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதி சி.நாகவாணி ராஜா அவர்களின் மேற்பார்வையில் ஹட்டன் டன்பார் விளையாட்டு வளாகத்தில் நேற்று காலை 8 மணி முதல் (30) இன்று (31) காலை 8 மணி வரை 24 மணி நேரம் இளைஞர்கள் குழுவினர் நடனமாடினர்.
சிறிது நேரம் ஓய்வு

சோழன் மேற்பார்வைக் குழுவின் அதிகாரிகள் ஓய்வெடுக்கவும், உணவு சாப்பிடவும் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
உலக சாதனையை காண

பெருந்தோட்டத்தில் 09 இளைஞர்கள் படைத்த உலக சாதனையை காண பெருமளவான இளைஞர்களும் அவர்களது உறவினர்களும் வருகை தந்திருந்ததுடன் அவர்களின் இந்த சாதனையை பாராட்டியுள்ளனர்.
images -ada