ஈரானை நோக்கி நகரும் உலகின் மிகப்பெரிய போர் கப்பல்! அமெரிக்காவின் அடுத்த பேரிடி
அணு ஒப்பந்தத்தைப் பெற ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்கனவே USS Abraham Lincoln செயற்பாட்டில் உள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய போர் கப்பலாக கருதப்படும் USS Gerald R. Ford கரீபியன் பிராந்தியத்திலிருந்து விரைவில் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சி மாற்றம்
இந்த நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்வது “நடக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப தெரிவித்துள்ளார்.

Image Credit: PBS
அதன்படி, ஈரானின் மதஆட்சி அமைப்பை மாற்றுவதற்கான ட்ரம்பின் தெளிவான ஆதரவை இது வெளிப்படுத்துவதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்ப், அணு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்திருந்தாலும், சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் சந்தித்த பிறகு, தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் என அறிவித்துள்ளார்.
ஈரானின் அணு திட்டம்
அமெரிக்கா, ஈரான் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் அரசு ஈரான் தனது ஏவுகணை திட்டங்களையும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவையும் நிறுத்த வேண்டும் எனக் கோருகிறது.

எவ்வாறானினும், ஈரான், தன் அணு திட்டத்தை கட்டுப்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு பதிலாக தணிக்கைத் தடைகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், “அளவுக்கு மீறிய கோரிக்கைகளுக்கு இணங்க மாட்டோம்” என எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |