மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும்
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னலினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வீட்டினுள் தங்குமிடம் தேடுங்கள், முன்னுரிமையாக மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளைத் தவிர்க்கவும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கம்பி தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மிதிவண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |