மன்னார் கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட படகு : இருவர் கைது
Mannar
Sri Lanka Navy
Law and Order
By Sathangani
மன்னார் கடற்பரப்பில் டிங்கி படகொன்றை இலங்கை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பொதிகள் மீட்பு
அந்த டிங்கி படகிலிருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.

இந்தநிலையில் குறித்த படகும் சந்தேகநபர்களும் தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி