செக் வைத்த ஹவுதி - எழும்பும் புகை: சவுதி விமான நிலையம் மீது பயங்கரத் தாக்குதல்
சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ள பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
முன்னதாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பதிலடி தாக்குதல்கள்
ஏமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிய சவூதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, திங்களன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சனா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதல்கள், ஒரு ஈரானிய விமானம் தரையிறங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ஏமனில் உள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சவூதி அரேபிய அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
அபா பகுதி சவுதி அரேபியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், யேமன் எல்லைக்கு அருகில் உள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகராகவும் விளங்கும் நிலையில், இத்தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |