யாழில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
Sri Lankan Tamils
Jaffna
By Kajinthan
யாழில் கடன் தொல்லை காரணமாக இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(17.03.2026) இடத்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டிணசபை வீதி, சங்கானை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம்
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்