கொழும்பில் விருந்து நிகழ்வில் மோதல் -இளைஞன் உயிரிழப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Crime
Death
By Sumithiran
2 நாட்கள் முன்
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்ற விருந்தின் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
போர்ட் சிட்டி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் இளைஞன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை (18) அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி! 35 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்