யாழில் கனடா செல்வதற்கு திட்டமிட்டிருந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு
Jaffna
Sri Lanka
Canada
By Harrish
கனடா (Canada) செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த யாழ். இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். ஆரியகுளம் பகுதியில் இன்று (22.04.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரிவியவருகையில், குறித்த இளைஞன் கனடா செல்வதற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்துள்ளார்.
இருப்பினும் நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணம் - ஆரியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள காணியில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி