மோசமாகும் நெருக்கடி நிலைமை: சீனா வழங்கிய உதவியும் வாக்குறுதியும்
1,000 மெட்ரிக் தொன் அரிசி
இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000 மெட்ரிக் தொன் அரிசி கொண்ட நாற்பத்தி நான்கு கொள்கலன்கள் இலங்கைக்கு வந்தடைந்துள்ளன.
இவை நேற்று செவ்வாய்க்கிழமை (28) இலங்கையின் கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கை முழுவதும் உள்ள 7,900 பாடசாலைகளுக்கு சீனா மொத்தம் 10,000 மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குவதாகவும், 6 மாதங்களுக்கு பாடசாலை உணவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்
44 containers of 1,000 metric tonnes rice donated by #Chinese people to #SriLankan students have arrived and been handed over to 🇱🇰 Ministry of Education today.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 28, 2022
🇨🇳 gifts a total of 10,000 MT of rice to 7900 schools across #lka and supports its School Meal Program for 6 months. pic.twitter.com/EGnYHMnpt6
இலங்கை முழுவதிலும் உள்ள 7,900 பாடசாலைகள் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு தினசரி போஷாக்கான உணவை வழங்குவதற்காக இலங்கையின் பாடசாலை உணவுத் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கிறது என்றார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தூதுவர் Qi Zhenhong தெரிவித்தார்.
அடுத்த வாரத்திலும் அடுத்த வாரத்திலும் மேலும் இரண்டு நன்கொடைகள் வந்து சேரும் என்றும், மேலும் பல பொருட்கள் கையிருப்பில் இருக்கும் என்றும் தூதுவர் மேலும் கூறினார்.
புதிய கல்வியாண்டில் பாடசாலை சீருடைகள்
இலங்கைப் பாடசாலை உணவுத் திட்டத்தை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு நிலைநிறுத்த சீனா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார்.
இதற்கு மேலதிகமாக, புதிய கல்வியாண்டில் நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன தூதரகம் இலங்கையின் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.
சீனத் தூதுவர் Qi Zhenhong, கொழும்பு துறைமுகத்தில் உள்ள CICT இல் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வில் இதனை அறிவித்தார்.