உக்கிரமடையும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: நாட்டை வந்தடைந்த இலங்கையர்கள்
காசாவிலிருந்து 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கத்தாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர், அதனை தொடர்ந்து இஸ்ரேல் பிரகடனம் அறிவித்து இன்று வரை காசா மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா மோதல்
காசாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 3ஆம் திகதி எகிப்துக்கு வந்ததாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம் தெரிவித்திருந்தது.
காசாவில் இடம்பெற்று வரும் மோதலையடுத்து குறித்த 11 இலங்கையர்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள்
மேலும், 17 இலங்கையர்கள் காசா பகுதியில் தங்கியிருந்தனர், இவர்களில் 4 இலங்கையர்கள் காசாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் பிரதானி பென்னட் குரே கூறியுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்