தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (Local Government Election) நடைபெறவுள்ள நிலையில் இதுவரை தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு (Police media) தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான முறைப்பாடு
அத்துடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (08) காலை 6.00 மணி முதல் இன்று (09) காலை 6.00 மணி வரை தேர்தல் தொடர்பான குற்ற முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளதுடன் தேர்தல் சட்டங்களை மீறியதாக 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 3 முதல் இன்றுவரை மொத்தமாக 24 குற்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் அந்தக் காலகட்டத்தில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

