ராஜபக்சக்களை நெருங்கும் பேராபத்து....! அரசிற்கு வலுக்கும் அழுத்தம்
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான விசாரணைகளைத் தற்போதைய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கடந்த கால ஊழல்களின் குறியீடாக மக்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பார்க்கப்படும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கம் தன் அரசியல் முகத்தையும் மக்கள் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் என்ற அழுத்தம் அரசுக்கு உள்ளது.
இந்த நிலையில் ராஜபக்ச ஆதரவாளர்களும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தரப்பினரும், இந்த நகர்வுகளைத் தங்களின் அரசியல் செல்வாக்கை முற்றிலும் அழிப்பதற்காக எடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல் என்றே சித்தரிக்கின்றனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, முன்னாள் ஆட்சியாளர்களைக் கைது செய்யும் படலத்தை அரசு கையில் எடுக்கிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இவ்வாறு போரை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவர் என்ற பிம்பம் கொண்ட மகிந்தவை நேரடியாக நெருங்குவது, தென்னிலங்கையில் அவருக்கு மீண்டும் ஒரு அனுதாப அலையை உருவாக்கக்கூடும் என்ற அரசியல் அச்சமும் இங்கு நிலவுகிறது.
இவ்வாறான பின்னணியில் தற்போதைய அரசாங்கம், வெறும் கைதுகளோடு நின்றுவிடாமல், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைச் சட்டப்பூர்வமாக நிரூபித்துத் தண்டனை பெற்றுத் தருமா அல்லது இது வழக்கமான அரசியல் நாடகமாக முடியுமா என்பதே விமர்சகர்களின் முதன்மைக் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
இது குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
[F2H0YZZஸ
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |