இது கோட்டாபயவால் கிடைத்த ஆட்சி என்பதால் ரணிலுக்கு அனுமதி இல்லை - வலியுறுத்தும் பௌத்த பிக்கு
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், முதலில் மக்களின் ஆணையைப் பெற வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிபர் தேர்தலை அறிவித்து, 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை மக்களிடம் கேளுங்கள்.
13வது திருத்தம்
அதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்க அவர்கள் தயாராக இருந்தால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவருக்கு உரிமை உண்டு ஆனால் தற்போதுள்ள ஆணையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவ்வாறான உரிமை இல்லை என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கும் அவ்வாறான ஆணை எதுவும் இல்லை. அவர்கள் பதவிகளை தேர்தல் மூலம் அல்ல, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தவர்களின் உதவியுடன் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)