இஸ்ரேலின் முடிவால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய குடியேற்றங்களை அனுமதித்த இஸ்ரேலின் முடிவை பிரித்தானியா, கனடா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 14 நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.
இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணானது எனவும் காசாவில் நிலவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த நாடுகள் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
நிலையான அமைதி
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மேற்கு கரையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை 19 புதிய குடியேற்றங்களை அனுமதித்ததை நாங்கள் கண்டிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, எந்தவிதமான இணைப்பையும் மற்றும் குடியேற்ற விரிவாக்கத்தையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.

இரு நாடுகள் தீர்வு அடிப்படையில் முழுமையான, நியாயமான மற்றும் நிலையான அமைதிக்கான தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.
இதற்கு பதிலளித்த இஸ்ரேல், இந்த விமர்சனங்களை பாகுபாடு எனக் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டுத் துறை
மேலும் தெரிவித்த வெளிநாட்டுத் துறை அமைச்சர், “யூதர்கள் இஸ்ரேல் நிலத்தில் வாழும் உரிமையை வெளிநாட்டு அரசுகள் கட்டுப்படுத்த முடியாது.
இப்படிப்பட்ட அழைப்புகள் நெறியியல் ரீதியாக தவறானதும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடுமாகும்” என தெரிவித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேலின் கடுமையான வலதுசாரி நிதியமைச்சர் பெஸலேல் ஸ்மோட்ரிச், இந்த குடியேற்றத் திட்டம் எதிர்கால பலஸ்தீன நாடு உருவாவதைத் தடுக்கவே என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
2022 இறுதியில் அரசு பொறுப்பேற்றதிலிருந்து 69 புதிய குடியேற்றங்கள் கட்டட அனுமதி பெற்றதாக அல்லது பின்னோக்கி சட்டபூர்வமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |