வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகவுள்ள 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி
இதனைத் தொடர்ந்து, வருகிற 19ஆம் திகதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு தாக்கிய மிக மோசமான 'கல்மேகி' (Kalmaegi) சூறாவளியினால் 114 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்தநிலையில் மற்றொரு சூறாவளியான ஃபோங்-வோங், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த புயல் தற்போது தென்கிழக்கு திசையில் வேகமாக நகர்ந்து வருகின்ற நிலையில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |