பாதாள உலகத்தை அழிக்க தயார் நிலையில் படையணிகள் : முடுக்கிவிடப்படவுள்ள நடவடிக்கை

Sri Lanka Police STF Deshabandu Tennakoon
By Sumithiran Mar 16, 2024 12:21 PM GMT
Report

காவல்துறை மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில், அப்பாவிகளின் உயிர்களைப் பறிக்கும் பாதாள உலகக் குழுக்களை அழிக்கும் பாரிய நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (18ஆம் திகதி) முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்பிரதேசங்களில் செயற்படும் பாதாள உலகக் குழுக்களை அழிப்பதற்காக காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோரின் மேற்பார்வையில் 20 ஆயுதமேந்திய தாக்குதல் காவல்துறை படையணிகள் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

நேரடி கண்காணிப்பில் தாக்குதல் படைப்பிரிவுகள்

இந்த தாக்குதல் படைப்பிரிவுகள் காவல்துறை மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் உத்தரவின் பேரில் மாத்திரம் செயற்படுவதுடன் அடையாளங்காணப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை அழிப்பதற்கு முழு நேரமும் செயற்படவுள்ளன.

பாதாள உலகத்தை அழிக்க தயார் நிலையில் படையணிகள் : முடுக்கிவிடப்படவுள்ள நடவடிக்கை | 20 Police Teams To Destroy The Underworld

குற்றச் செயல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள சில காவல் நிலையத் தளபதிகள் பாதாள உலகக் குழுக்களுக்கு அஞ்சுவதும் வேறு சிலர் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளை பேணுவதும்தான் பாதாள உலகக் குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

காவல்துறை மா அதிபர்,கடும் எச்சரிக்கை

இதன்படி, பாதாள உலகத்தை அடக்கத் தவறிய 62 பிரதேசங்களின் நிலையத் தளபதிகளுக்கு எதிராக காவல்துறை மா அதிபர் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி, 62 அதிகாரிகளையும் கொழும்புக்கு வரவழைத்த காவல்துறை மா அதிபர், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இனிமேல் அந்தப் பகுதிகளில் பாதாள உலகக் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், நிலையத் தளபதிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு,அவர்கள் சாதாரண கடமைகளுடன் நியமிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

பாதாள உலகத்தை அழிக்க தயார் நிலையில் படையணிகள் : முடுக்கிவிடப்படவுள்ள நடவடிக்கை | 20 Police Teams To Destroy The Underworld

பாதாள உலக குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வரும் தென் மாகாணத்தில் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்ய காவல்துறை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மகேஷ் சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தை நோக்கி விரையும் அனுர..! போர்க்கொடி தூக்கும் தமிழரசு கட்சி உறுப்பினர்

தமிழர் தாயகத்தை நோக்கி விரையும் அனுர..! போர்க்கொடி தூக்கும் தமிழரசு கட்சி உறுப்பினர்

மேலும், எதிர்வரும் நாட்களில் தென் மாகாணத்தில் இருந்து சுமார் 10 பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் நிலைய கட்டளைத் தளபதிகளை நீக்குவதற்கு காவல்துறை மா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023