உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் டிலான் சஞ்சன முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலய மாணவன் கிரிஷான் சசிந்து இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
மூன்றாமிடம் பெற்று சாதனை
இந்தப் பிரிவில் மூன்றாமிடத்தை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்ஷனா கோனேஷ் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை கடந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்த நிலையில் 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் வெளியான பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும் 30, 898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்