சாதாரண தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (G.C.E O/L Exam) விண்ணப்பங்கள் குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9 வரை இணையவழியில் கோரப்படும் என கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம்
தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலரின் (தாய் அல்லது தந்தை) தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் (Department of Examinations) அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சரியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |