ஐ.நா சபையில் இலங்கைக்கு ஆதரவாக திரண்ட 21 நாடுகள்! எதிராக வந்த 15 நாடுகள் - முழு விபரம் உள்ளே...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையான உரைகளின் அடிப்படையில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும், 15 நாடுகள் எதிராகவும் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா, நோர்வே, கனடா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசினர்.
இருப்பினும், இந்தியாவும் ஜப்பானும் நடுநிலைகளை வகித்தன. மேற்கத்திய நாடுகளின் நட்பு நாடாக இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மிதமான தொனியில் பேசியது. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய 21 நாடுகளில், பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.
.
இந்த நாடுகள்
ரஷ்யா,
சீனா,
பாகிஸ்தான்,
ஈரான்,
வியட்நாம்,
மாலைதீவு,
கியூபா,
நிகரகுவா,
எரிட்ரியா,
நேபாளம்,
கம்போடியா,
லாவோஸ்,
அஜர்பைஜான்,
பெலாரஸ்,
வட கொரியா,
காபோன்,
பிலிப்பைன்ஸ்,
சிரியா மற்றும்
எகிப்து ஆகும். :