பறவைகள் பூங்காவை சுற்றிவளைத்த காவல்துறைக்கு காத்திருந்த ஆச்சரியம்!
ஹம்பாந்தோட்டை - நகரவேவ பறவைகள் பூங்காவில் உள்ள ஒரு களஞ்சியசாலையில், ஆடம்பர ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 21 சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை தலைமை அதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு இன்று (12) மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களின் மொத்த மதிப்பு ரூ. 15 மில்லியனுக்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
சம்பவம் தொடர்பாக பறவை பூங்காவின் மேலாளர் மற்றும் களஞ்சியசாலை பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மித்தெனிய மற்றும் மாத்தறை பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



