ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Ministry of Education Harini Amarasuriya Teachers
By Sathangani Jun 04, 2026 09:53 AM GMT
Report

இந்த ஆண்டு இறுதிக்குள் 23,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக என பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரும் 2027 ஆம் ஆண்டாகும்போது பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கணிசமான அளவு குறைக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் மேல் மாகாண தேசிய பாடசாலை அதிபர்களைத் தெளிவுபடுத்துதல் மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விபரங்களை குறிப்பிட்டார்.

தமிழ் சொல்லிசை கலைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

தமிழ் சொல்லிசை கலைஞரின் கைது! இரட்டைத் தரநிலைகளில் PTA என்கிறார் நாமல்

ஆசிரியர் பற்றாக்குறை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய, 23,000 புதிய ஆசிரியர்களைப் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | 23000 Teachers Appointed By The End Of This Year

இந்த வருட இறுதிக்குள் இந்த ஆசிரியர் நியமனங்களைச் செய்து முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், வரும் 2027 ஆம் ஆண்டாகும்போது பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கணிசமான அளவு குறைக்க முடியும்.

பாடசாலைகளில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நின்றுபோயுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதி மேம்பாட்டுத் திட்டங்களை மிக விரைவாக நிறைவு செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 2027 ஆம் ஆண்டு முதல் புதிய பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான திட்டவட்டமான வரைபுகளை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து வருகின்றது.

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து! அதிகரிக்கும் உயிரிழப்புகள்

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து! அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இலங்கையின் கல்வித்துறை

ஒவ்வொரு பிள்ளைக்கும் அன்பு, பாதுகாப்பு மற்றும் அரவணைப்புடன் கூடிய உன்னதமான இடமாகப் பாடசாலையை மாற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் முழு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறது.

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு | 23000 Teachers Appointed By The End Of This Year

நெருக்கடிமிக்கச் சூழல்களிலும் இருக்கும் வளங்களைச் சரியாக முகாமைத்துவம் செய்து, கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அதிபர்கள் வழங்கும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

இலங்கையின் கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்புப் பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொண்டு, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் கல்வித்துறையை மாற்றுவதற்கான நிலையான நீண்டகாலத் திட்டம் ஒன்றும் அரசாங்கத்திடம் உள்ளது” என தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015