படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

Journalists In Sri Lanka
By Vanan Oct 19, 2023 10:44 AM GMT
Report

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 

யாழ். ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமைய செயலாளர் க. நிதர்சன் ஏற்றி வைக்க, உருவப் படத்திற்கான மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர் ம. நியூட்டன் அணிவித்தார்.

தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று | 23Rd Death Anniversary Of Journalist Nimalarajan

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று | 23Rd Death Anniversary Of Journalist Nimalarajan

முல்லைத்தீவில்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் , சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட ம.நிமலராஜன் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று | 23Rd Death Anniversary Of Journalist Nimalarajan

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று | 23Rd Death Anniversary Of Journalist Nimalarajan

வவுனியாவில்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆவது நினைவுதினம் வவுனியா ஊடக அமைய அலுவலகத்தில் இன்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதலாவது ஈகை சுடரினை சிரேஷ்ட ஊடகவியலாளர் கி. வசந்தரூபன் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிமலராஜனின் உருவப்படத்திற்கு ஏனைய ஊடகவியலாளர்கள் நினைவுச்சுடரை ஏற்றியதுடன் மலரஞ்சலியினையும் செலுத்தினர்.

அவர் தொடர்பான நினைவுப்பேருரையினை ஊடகவியலாளர் இ.சற்சொரூபன் நிகழ்த்தியிருந்தார். அவ் உரையில் இலங்கையில் தமிழ் ஊடவியலாளர்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாகும் நிலமை நீடித்துவருகின்றது. அத்துடன் நிமலராஜன் உட்பட படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான நீதி பலவருடங்களாக மறுக்கப்பட்டு வருகின்றது.

அந்தக் கொலைகள் தொடர்பாக எவ்வித உள்நாட்டு விசாரணைகளோ அல்லது சர்வதேச விசாரணையோ இடம்பெறாமல் இருக்கின்றமையையிட்டு நாம் கவலையடைக்கின்றோம்.

இந்நிலையில் ஊடக சுதந்திரத்தினை பாதுகாப்பதுடன், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் உரியதரப்புக்கள் கரிசனையுடன் செயற்படவேண்டும் என்று தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று | 23Rd Death Anniversary Of Journalist Nimalarajan

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று | 23Rd Death Anniversary Of Journalist Nimalarajan

துணிவான ஊடகப்பணி

போர்ச் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன்.

மற்றுமொரு பேருந்தும் பள்ளத்தில் கவிழ்ந்தது! ஒருவர் பலி : 18 பேர் வைத்தியசாலையில்..

மற்றுமொரு பேருந்தும் பள்ளத்தில் கவிழ்ந்தது! ஒருவர் பலி : 18 பேர் வைத்தியசாலையில்..

அவர் பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

அந்த நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதன் போது அவர் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை மீது வீழ்ந்தவாறே உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டனர்.

வடக்கில் பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை

வடக்கில் பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை

அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026