தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக பலாலி காவல்துறையினரால் தொடரப்பட்ட மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன.
தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் நேற்று (26) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தவணையிடப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கும் ஏனைய இரண்டு வழக்குகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலன் சுவாமிகள் தெரிவிப்பு
வழக்கு தொடர்பாக ஒவ்வொரு முறையும் விசாரணைகளின்றி தவணையிடப்பட்டு வருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |