பழம்பெரும் பாடகி நந்தா மாலனி காலமானார் - மூன்று நாட்கள் தேசிய துக்க தினம்
இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பிரபல மூத்த பாடகியான கலாநிதி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் காலமானார்.
பழம்பெரும் சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலனியின் மறைவையடுத்து மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இறுதிச் சடங்குகள்
இது தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நந்தா மாலனியின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) இடம்பெறவிருக்கின்றதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தனது கலைப் பயணத்தில் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான பாடகிக்கான 12 சரசவிய விருதுகளையும் 10 ஜனாதிபதி விருதுகளையும் வென்றுள்ள இவர், புதிய படைப்புகளை ஒலிநாடாக்கள் (Cassettes) மற்றும் குறுந்தகடுகள் (CDs) மூலம் ரசிகர்களுக்கு வழங்கி இசைத்துறையில் பல புதிய பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening