அமெரிக்காவில் வாகன விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழப்பு
United States of America
India
World
By Laksi
அமெரிக்காவில் (United States) வாகன விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம்
மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்