33 வேட்பாளர்கள் அதிரடி கைது : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இருந்த 33 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியதற்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மார்ச் மூன்றாம் திகதி முதல் ஏப்ரல் 30 வரை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி
அத்தோடு, வேட்பாளர்களைத் தவிர பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் 349 பேரும் இதே காலகட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்முறைச் செயல் தொடர்பான புகார்கள் நேற்று (29) பதிவு செய்யப்பட்டதாகவும், மார்ச் மூன்றாம் திகதி முதல் பெறப்பட்ட மொத்த புகார்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக 32 வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
