காத்தாடி நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுமி உயிரிழப்பு!
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் காத்தாடி நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சம்பவம் உத்தராயண கொண்டாட்டங்களுக்கு மத்தியில் குஜராத்தின் வெவ்வேறு நகரங்களில் சனிக்கிழமையன்று இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், 3 வயது சிறுமியும் 35 வயது ஆணும் காத்தாடி நூலால் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிருஷ்ணா தாக்கூர் (3) மதியம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் நகரில் தனது தாயுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் காத்தாடி நூல் சிக்கி தொண்டை அறுபட்டதால் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுமி இறந்துவிட்டதாகவும் மேலும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்
மற்றொரு சம்பவத்தில், சுவாமிஜி யாதவ் (35), வதோதரா நகரில் உள்ள சானி பகுதியில் உந்துருளியில் சென்றபோது, காத்தாடி நூலால் கழுத்து அறுக்கப்பட்டதில் உயிரிழந்தார்.
குஜராத் முழுவதும் நாள் முழுவதும் காத்தாடி கம்பிகளால் பலர் காயமடைவதாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக 108 அவசர மருத்துவ சேவைகள் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
