U.S விமானம் தாங்கியில் 30 மணி நேர தீ! 600 படையினர் கதி?
மத்திய கிழக்கு போர்நிலவரங்களால் இலங்கை எதிர்நோக்கப்போகும் சவால்களை சிறிலங்காவின் ஏகேடியார் அரசாங்கம் லேற்றாக என்றாலும் லேற்ரஸ்ராக உணர்வதால் சில அதிரடியான முடிவுகளை எடுத்துவருகிறது.
அரசாங்கத்தின் திறமை குறித்து பரவலாக சிங்கள மக்கள் வாதப்பிரதிவாதங்களை செய்ய ஆரம்பித்த நிலையில் இப்போது அடுத்தடுத்து அசைவுகள் வருகின்றன.
அந்த வகையில் கியுஆர் திட்டத்துக்கு பின்னரான இன்னொரு அதிரடியாக நாளை மார்ச் 18 ஆந்திகதி புதன்கிழமை முதல் மறுஅறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரசவிடுமுறை என்ற அறிவித்தல் குதித்து விட்டது.
அத்தியாவசிய சேவைத் துறைபணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இந்த புதன் லீவு பொருந்தும் எனவும் அறிவித்துள்ள அரசாங்கம் மறுஅறிவித்தல் வரை அனைத்து அரசாங்க நிகழ்வுகளையும் இடைநிறுத்தவும் அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
இவ்வாறாக புதன்கிழமை லீவால் சிக்கனப்படுத்தப்படும் எரிபொருளை அத்தியாவசிய் தேவைகளுக்கு திருப்பிவிடவும் அரசாங்கம்; திட்டமிடும் நிலையில் இவ்வாறான முறைகளின் பெறுபேறுகள்; முன்னைய கோட்டாபாய மேற்பார்த்த ராஜபக்சகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன உரத்தடை அல்லது கொரோனா காலகூத்துகள் போன்ற மாதனமுத்தா முறைகள் அல்ல வெற்றிகர முறைகள் எனபதை அநுர அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் இந்த நிலவரங்களையும் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்லில் ஏற்பட்ட தீயால் ஏற்பட்ட அதிர்ச்சிகர பாதிப்புகள் குறித்த விடயங்களையும் மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |