தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள் : நெருக்கடியில் 30 உள்ளூராட்சி சபைகள்
சுமார் முப்பது உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதால், அந்த சபைகளை கொண்டு நடத்துவதில் கடுமையான சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை காரணமாக, அந்த சபைகளைப் பராமரிப்பதற்கு அவற்றின் தவிசாளர்கள் சட்ட ஆலோசனையை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேவையான அறிவுறுத்தலை வழங்கும் உள்ளூராட்சி அமைச்சு
அத்துடன், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் அந்த சபைகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரவு செலவுத் திட்டங்களை இழந்த பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அமைச்சர் வெளியிட்ட தகவல்
இது தொடர்பாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் இரண்டு முறை இழந்தாலும் அவற்றைப் பராமரிக்கும் திறன் தலைவருக்கு இருப்பதாக கூறினார்.

இதற்கிடையில், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைத்தவுடன் ஆனமடுவ பிரதேச சபையின் அதிகாரத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |