இஸ்ரேல் பிடியில் சிக்கிய 360 மருத்துவப் பணியாளர்கள்: காசா மக்கள் அந்தரிப்பு!
காசாவில் குறைந்தது 360 மருத்துவப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் தொடங்கியதிலிருந்து குறைந்தபட்சம் 360 மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் துயரமான மற்றும் கடுமையான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்றும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மருத்துவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பது மேலும் தடைபட்டுள்ளது என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச தலையீட்டிற்கு அழைப்பு
சிறையில் அடைக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடைமுறைகளை குற்றமாக்குவதற்கும் அவர்களின் விடுதலைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் அவசர சர்வதேச தலையீட்டிற்கு சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, 2023 ஒக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து காசா முழுவதும் குறைந்தது 1,400 சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

