நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த மாத்திரை!
மாத்திரை தொண்டையில் சிக்கியதால் நான்கு வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமி நேற்று (12) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காய்ச்சல் காரணமாக சிறுமிக்கு பாட்டி கொடுத்த மாத்திரை சிறுமியின் தொண்டையில் சிக்கியதில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
மாத்திரை தொண்டையில் சிக்கியதில் சிறுமி மயக்கமடைந்ததனால் அவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரின் தாயார் வெளிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மரண விசாரணை
இந்த சிறுமியின் தந்தை, அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண விசாரணை அதிகாரி அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


சந்திரிகாவின் இனப்படுகொலைகளுக்கு அநுரவும் பொறுப்புக்கூற வேண்டும்! 34 நிமிடங்கள் முன்
