மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி

CEB Power cut Sri Lanka Minister of Energy and Power Mega Power
By Dilakshan Apr 14, 2025 06:16 AM GMT
Report

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.    

சூரிய மின்கலங்களை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் குறித்த சதித்திட்டம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விடயங்களை எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன (Asoka Abeygunawardana) தெரிவித்துள்ளார்.

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

நாட்டில் மின்சாரம் தடை 

ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபை (CEB) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

புத்தாண்டு விடுமுறை காலத்தில் மின்சார நுகர்வு மிகவும் குறைவாக இருக்கும் சூழலில், வெயில் நிறைந்த நாட்களில் கூரை மீது உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகள் அதிக உற்பத்தியை ஏற்படுத்துகின்றன.

இது மின்கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மின்சார சபை கூறுகிறது.  

மின்சார தேவை கணிசமாக குறையும் போது மற்றும் வெயில் அதிகமாக இருக்கும் போது, இலங்கை மட்டுமல்லாமல் உலகின் எந்த நாடும் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மின்சார சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மின்சார பயன்பாடு மிகவும் குறைவு 

பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இந்த நாட்களில் மூடப்பட்டுள்ளதால், மின்சார பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பகல் நேரத்தில் அதிகப்படியான சூரிய மின்சக்தி மின்கட்டமைப்பிற்கு செல்கிறது என்று மின்சார சபை தெரிவிக்கிறது.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

இந்த நிலைமையை சமநிலைப்படுத்த, மின்சார சபை நீர்மின்சாரம், நிலக்கரி மற்றும் பிற அனைத்து வெப்ப மின்சார உற்பத்தி நிலையங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

ஆனால், நுகர்வோர் தங்கள் சூரிய மின்சக்தி அமைப்புகளை அணைக்கவில்லை என்றால், கூரை மீது உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார சபையால் கட்டுப்படுத்த முடியாது.

இது தேசிய மின்கட்டமைப்பால் தாங்க முடியாத நிலையை உருவாக்கினால், ஒரு சிறிய பிழை கூட மின்னழுத்தம் அல்லது அதிர்வெண் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று மின்சார சபை எச்சரிக்கிறது.  

ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு தெரியுமா?

பிரச்சினைக்கு முக்கிய காரணம்

குறித்த விடயம் தொடர்பில் எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில், சூரிய மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான அமைப்புடன் இணைக்கும் போது செயல்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அமைப்பு இல்லாததே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

குறைந்த மின்சார தேவை உள்ள காலங்களில், சூரிய மின்கலங்கள் மூலம் பிரதான அமைப்பிற்குள் மின்சாரம் பாயும் போது, ​​தேசிய அமைப்பின் சமநிலை சீர்குலைவதில்லை என எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025