மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி

CEB Power cut Sri Lanka Minister of Energy and Power Mega Power
By Dilakshan Apr 14, 2025 06:16 AM GMT
Report

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.    

சூரிய மின்கலங்களை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் குறித்த சதித்திட்டம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விடயங்களை எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன (Asoka Abeygunawardana) தெரிவித்துள்ளார்.

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

நாட்டில் மின்சாரம் தடை 

ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபை (CEB) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

புத்தாண்டு விடுமுறை காலத்தில் மின்சார நுகர்வு மிகவும் குறைவாக இருக்கும் சூழலில், வெயில் நிறைந்த நாட்களில் கூரை மீது உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகள் அதிக உற்பத்தியை ஏற்படுத்துகின்றன.

இது மின்கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மின்சார சபை கூறுகிறது.  

மின்சார தேவை கணிசமாக குறையும் போது மற்றும் வெயில் அதிகமாக இருக்கும் போது, இலங்கை மட்டுமல்லாமல் உலகின் எந்த நாடும் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மின்சார சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மின்சார பயன்பாடு மிகவும் குறைவு 

பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இந்த நாட்களில் மூடப்பட்டுள்ளதால், மின்சார பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பகல் நேரத்தில் அதிகப்படியான சூரிய மின்சக்தி மின்கட்டமைப்பிற்கு செல்கிறது என்று மின்சார சபை தெரிவிக்கிறது.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

இந்த நிலைமையை சமநிலைப்படுத்த, மின்சார சபை நீர்மின்சாரம், நிலக்கரி மற்றும் பிற அனைத்து வெப்ப மின்சார உற்பத்தி நிலையங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

ஆனால், நுகர்வோர் தங்கள் சூரிய மின்சக்தி அமைப்புகளை அணைக்கவில்லை என்றால், கூரை மீது உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார சபையால் கட்டுப்படுத்த முடியாது.

இது தேசிய மின்கட்டமைப்பால் தாங்க முடியாத நிலையை உருவாக்கினால், ஒரு சிறிய பிழை கூட மின்னழுத்தம் அல்லது அதிர்வெண் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று மின்சார சபை எச்சரிக்கிறது.  

ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு தெரியுமா?

பிரச்சினைக்கு முக்கிய காரணம்

குறித்த விடயம் தொடர்பில் எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில், சூரிய மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான அமைப்புடன் இணைக்கும் போது செயல்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அமைப்பு இல்லாததே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

குறைந்த மின்சார தேவை உள்ள காலங்களில், சூரிய மின்கலங்கள் மூலம் பிரதான அமைப்பிற்குள் மின்சாரம் பாயும் போது, ​​தேசிய அமைப்பின் சமநிலை சீர்குலைவதில்லை என எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024