மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி

CEB Power cut Sri Lanka Minister of Energy and Power Mega Power
By Dilakshan Apr 14, 2025 06:16 AM GMT
Report

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.    

சூரிய மின்கலங்களை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் குறித்த சதித்திட்டம் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விடயங்களை எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன (Asoka Abeygunawardana) தெரிவித்துள்ளார்.

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்த இடம்

நாட்டில் மின்சாரம் தடை 

ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபை (CEB) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

புத்தாண்டு விடுமுறை காலத்தில் மின்சார நுகர்வு மிகவும் குறைவாக இருக்கும் சூழலில், வெயில் நிறைந்த நாட்களில் கூரை மீது உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகள் அதிக உற்பத்தியை ஏற்படுத்துகின்றன.

இது மின்கட்டமைப்பின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மின்சார சபை கூறுகிறது.  

மின்சார தேவை கணிசமாக குறையும் போது மற்றும் வெயில் அதிகமாக இருக்கும் போது, இலங்கை மட்டுமல்லாமல் உலகின் எந்த நாடும் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மின்சார சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மின்சார பயன்பாடு மிகவும் குறைவு 

பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இந்த நாட்களில் மூடப்பட்டுள்ளதால், மின்சார பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பகல் நேரத்தில் அதிகப்படியான சூரிய மின்சக்தி மின்கட்டமைப்பிற்கு செல்கிறது என்று மின்சார சபை தெரிவிக்கிறது.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

இந்த நிலைமையை சமநிலைப்படுத்த, மின்சார சபை நீர்மின்சாரம், நிலக்கரி மற்றும் பிற அனைத்து வெப்ப மின்சார உற்பத்தி நிலையங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

ஆனால், நுகர்வோர் தங்கள் சூரிய மின்சக்தி அமைப்புகளை அணைக்கவில்லை என்றால், கூரை மீது உள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார சபையால் கட்டுப்படுத்த முடியாது.

இது தேசிய மின்கட்டமைப்பால் தாங்க முடியாத நிலையை உருவாக்கினால், ஒரு சிறிய பிழை கூட மின்னழுத்தம் அல்லது அதிர்வெண் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று மின்சார சபை எச்சரிக்கிறது.  

ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு தெரியுமா?

ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு தெரியுமா?

பிரச்சினைக்கு முக்கிய காரணம்

குறித்த விடயம் தொடர்பில் எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில், சூரிய மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிரதான அமைப்புடன் இணைக்கும் போது செயல்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அமைப்பு இல்லாததே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரிக்க தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி | 40 Percent Electricity Tariff Hike From Next Month

குறைந்த மின்சார தேவை உள்ள காலங்களில், சூரிய மின்கலங்கள் மூலம் பிரதான அமைப்பிற்குள் மின்சாரம் பாயும் போது, ​​தேசிய அமைப்பின் சமநிலை சீர்குலைவதில்லை என எரிசக்தி நிபுணர் பொறியாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025