ஜப்பானில் இருந்து இறக்குமதியான வாகனங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
Port of Colombo
vehicle imports sri lanka
By Jaso
ஜப்பானில்(japan) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத நிலையில் இழுபறியில் சிக்கியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே இது தொடர்பாக கூறுகையில்,
வாகன இறக்குமதி தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் உள்ள விதிமுறைகள் இந்த நிலைமைக்கு வழிவகுத்தன.
ஒரு நிறுவனம் ஒரு கப்பலில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் தர ஆய்வு அறிக்கைகளை வழங்கியுள்ளது.
தர சோதனை அறிக்கை
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, தர சோதனை அறிக்கைகளைப் பெறக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களில் அந்த நிறுவனம் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி