இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இலங்கை தொடர்பில் அறிவிப்பு
புதிய இணைப்பு
இந்தியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அசாமின் மத்திய பகுதியில் இன்று (5) அதிகாலை 4.17 மணியளவில் ரிச்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்குக் கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீ ஆழத்தில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்
மத்திய அசாமின் பல பகுதிகளில், மோரிகான் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்கள் உட்பட, இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய வீதிகளில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இருப்பினும் நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்டை நாடுகளான பூட்டான், நேபாளம் மற்றும் வங்கதேசத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |