ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் சிபா மாகாணத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது இன்று (26) வெள்ளிக்கிழமை 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது டோக்கியோவிற்கு அருகிலுள்ள பகுதிகளை உலுக்கிய போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் அல்லது சேதங்கள்
உள்ளூர் நேரப்படி மதியம் 12:46 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிபா மாகாணத்தில் சுமார் 50 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் இருந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (25) வடக்கு ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 20 மணி நேரம் முன்