கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் கொள்கலன் ஏற்றப்பட்ட 500 வாகனங்கள்!

Colombo Port of Colombo
By Dharu Feb 21, 2026 11:50 PM GMT
Report

கொழும்பு துறைமுகத்தில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் இருப்பதாகவும், துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களின் நெரிசல் காரணமாக எதிர்காலத்தில் இந்த நிலைமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள கூறியுள்ளார்.

துறைமுகத்தின் உள்ளே இந்த கொள்கலன்கள் இருப்பதால் நெரிசல் வெளியில் தென்படவில்லை என்றும், எதிர்காலத்தில் அவற்றை துறைமுகத்துக்கு வெளியே அனுப்ப வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்தால் இங்குருகடை சந்தியிலிருந்து ஒருகொடவத்த வரை கொள்கலன்கள் வரிசையாக நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - மட்டக்களப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருகோணமலை - மட்டக்களப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

துறைமுக எல்லை

கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் துறைமுக எல்லைக்கு வெளியே அனுப்பினால் அவற்றின் பாதுகாப்பு குறித்து பிரச்சினைகள் எழலாம் என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சுங்கத்துறையிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,  நெரிசலை விரைவாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் கொள்கலன் ஏற்றப்பட்ட 500 வாகனங்கள்! | 500 Vehicles Loaded With Stagnant Containers

நெரிசல் அதிகரித்து துறைமுகத்துக்குள் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டால், புளூமெண்டல் பகுதியில் உள்ள கொள்கலன்கள் சேமிப்பகம் ஒன்றை ஒதுக்கி வழங்க வேண்டும் என்றும், வீதிகளில் வாகனங்களை வரிசைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த நெரிசல் நிலவி வருவதாகவும், கொள்கலன்கள் வெளியேறும் முக்கிய நுழைவாயிலை ஸ்மார்ட் முறையில் கணினி மயமாக்கி செயல்திறனை உயர்த்தினால் நெரிசலை குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சாதாரணமாக தினமும் சுமார் 1200 கொள்கலன்கள் அனுமதி பெற வேண்டும் என்றாலும், தற்போது சுமார் 500 மட்டுமே அனுமதி பெறுவதால் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கொள்கலன்கனை விடுவிக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் நிலையில், சாரதிகள் உதவியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

சுடலையை கூட விடுவிக்க மாட்டோம்: பலாலியில் இராணுவம் விடாப்பிடி

சுடலையை கூட விடுவிக்க மாட்டோம்: பலாலியில் இராணுவம் விடாப்பிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019