ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் ஓரணியில்...! தற்காப்புத் தாக்குதல் நடத்த அதிரடிப் பிரகடனம்
ஈரானின் நேரடி மற்றும் மறைமுக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்து சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய ஆறு அரபு நாடுகள் இணைந்து அதிரடி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
ஈரானின் இச்செயற்பாடுகள் அண்டை நாடுகளின் இறையாண்மை மற்றும் சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈராக் மண்ணிலிருந்து ஈரானிய ஆதரவுக் குழுக்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், ஐநா பாதுகாப்புச் சபையின் 2817 (2026) தீர்மானத்தை மீறுவதாகவும், இதனை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இராணுவ நடவடிக்கை
மேலும் தனது நிலப்பரப்பிலிருந்து அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஈராக் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஐநா சாசனத்தின் 51ஆவது பிரிவின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அல்லது கூட்டுத் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என அரபு நாடுகள் பிரகடனப்படுத்தியுள்ளன.
ஈரானுக்கு விசுவாசமான தூங்கும் படைகள் (Sleeper Cells) மற்றும் ஹிஸ்புல்லா தொடர்பான சதித்திட்டங்களை முறியடித்த தமது பாதுகாப்புப் படையினருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள இவ்வரபு நாடுகள், எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |