இறக்குமதியாகும் 600 புதிய பேருந்துகள்! வலுப்படுத்தப்படும் அரச போக்குவரத்து சேவை
இந்த ஆண்டு இறுதிக்குள் 600 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்து இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து சேவையை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் தகவல்களின்படி, இந்த இறக்குமதியில் அதிவேக நெடுஞ்சாலை சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட 200 சொகுசு பேருந்துகளும், சாதாரண வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 400 சாதாரண பேருந்துகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கழுத்து நெரித்து மருத்துவர் கொலை - யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா செல்ல சந்தேகநபர் திட்டத்தின் பின்னணி
நவீனப்படுத்தப்படும் பேருந்து சேவை
இதற்கிடையில், புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள 104 மெட்ரோ பேருந்துகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் இலங்கையை வந்தடையும் என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மெட்ரோ பேருந்துகள் அட்டை வழியிலான கட்டண வசூல் முறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நிறுவல் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, செப்டம்பர் 20ஆம் திகதிக்குள் அவை பொது மக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகள் இரண்டிலும் பயணிகளின் தேவையை எளிதாக்குவதையும், நவீன தொழில்நுட்பம் மற்றும் பயணிகளின் வசதிகளுடன் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையை நவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த விரிவாக்கம் செய்யப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்