கழுத்து நெரித்து மருத்துவர் கொலை - யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா செல்ல சந்தேகநபர் திட்டத்தின் பின்னணி
தெல்தெனிய கொலை சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லவே திட்டமிட்டிருந்ததாக காவல்துறையினர் முன்னதாக சந்தேகம் வெளியிட்ட நிலையில் விசாரணையில் முக்கிய விடயங்கள் வெளிவந்துள்ளன.
எனினும் குறித்த சந்தேக நபர் இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேகநபர் தன்னை ஒரு தமிழர் என காட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
யாழ்ப்பாணத்தில் வைத்து கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கண்டி தெல்தெனிய ஆதார மருத்துவமனைக்கு அருகில் கடந்த 17ஆம் திகதி கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் காவல்துறையினரினால் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், காவல்துறையினரின் நீண்ட தேடுதலின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவரது மனைவியையும் காவல்துறையினர் கடந்த (24) புதன் கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்தனர்.

தாம் உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அவர் தூக்கிட்ட நிலையில் இருந்ததாகவும் , இதனால் அச்சமடைந்து சடலத்தை காரில் ஏற்றி கண்டி தெல்தெனியவுக்குக் கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், பிரேத பரிசோதனை அறிக்கைகள் இது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், சந்தேகநபரால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு, தான் அந்த நபரின் “மூத்த சகோதரி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த மோசடிகளுக்கு உதவி செய்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குத் தப்ப திட்டம்
கைதான சந்தேகநபர், தான் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் அங்கிருந்து குருணாகல் சென்று, அங்குள்ள தமது ஏனைய இரு பிள்ளைகளையும் பார்த்த பின்னர் சரணடையவிருந்ததாகக் கூறினாலும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லவே திட்டமிட்டிருந்ததாக காவல்துறையினர் முதலில் சந்தேம் வெளியிட்டிருந்தனர்.

எனினும், சந்தேக நபர் இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் அதிக அளவு பணம் இல்லாததே இதை உறுதிப்படுத்துவதாக காவல்துறை தெரிவித்துள்ளது
பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, (சிறு குழந்தையுடன்) உடந்தையாக இருந்த குண்டசாலை பிரதேச சபை ஊழியர், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நுவரெலியா காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைது தொடர்ச்சியாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 22 மணி நேரம் முன்