இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) - கரடியனாற்றில் 6000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (29.04.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் அனுமதி கோரியுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
இதன்போது குறித்த சுகாதார பரிசோதகர் 6000 ரூபாவை லஞ்சமாக கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதியில் வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அதிரடி கைது
இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பொது சுகாதார பரிசோதகரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
