பயங்கரவாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சோமாலிய இராணுவம்!! 7 பேர் சுட்டுக்கொலை
சோமாலியாவில் பயங்கரவாதிகள் 7 பேர், அந்நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலியாவில் அல் - கொய்தா ஆதரவு பெற்ற அல் - ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் காவல்துறையினர் மற்றும் இராணுவ வீரர்களை குறிவைத்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்தும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க இராணுவம் கடுமையாக போராடி வருகிறது.
அந்த வகையில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜுப்பாலாந்து மாகாணத்தில் 4 வெவ்வேறு கிராமங்களில் அல்-ஷபாப் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.
இதில் பயங்கரவாதிகள் 7 பேர் இராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த அதிரடி தாக்குதலின்போது பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் பல நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக சோமாலிய இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)