தற்போதும் நிரம்பி வழியும் 71 நீர்த்தேக்கங்கள்
36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போதும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறையின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர்எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
மல்வத்து ஓயா பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு
மல்வத்து ஓயா பகுதியில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று பிற்பகல் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல முறை மழை பெய்ய வாய்ப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல முறை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர்ர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |