18 மணித்தியால விசேட தேடுதலில் 3,871 பேர் கைது
arrest
police
ajith rohana
By Shalini
நாடு பூராகவும் 18 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய கடந்த 18 ஆம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் 18 மணித்தியலாயங்கள் வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 905 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்கள் தொடர்பில் 6,898 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்