திருகோணமலையில் கோவில் திருவிழாவில் இனம்தெரியாத கும்பல் அடாவடி
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
By Shalini Balachandran
திருகோணமலையில் (Trincomalee) கோவில் திருவிழாவில் இனம் தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் திருகோணமலை பள்ளத்தோட்டம் பாலமுருகன் பூங்காவனத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஒன்பதாம் திகதி திருவிழா இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதையடுத்து, இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இனந்தெரியாத கும்பலொன்று உள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் ஆலய உபகரணங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்