கடவுச்சீட்டு விநியோக சேவை இடைநிறுத்தம் : வெளியான அவசர அறிவிப்பு
புதிய இணைப்பு
கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தற்போது கணினி அமைப்பை மீண்டும் சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
இலங்கையில் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி அமைப்பு செயலிழப்பால் இவ்வாறு பாதிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் மின்னஞ்சல் முகவரி என்று பொய்யாகக் கூறி வெளியிடப்படும் ஒரு மோசடி மின்னஞ்சல் குறித்து இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த மின்னஞ்சல்கள் தமது திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்பதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |