தழிழர் பகுதியில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவர்: நீதி கோரும் மனைவி

Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Mar 09, 2025 01:20 PM GMT
Report

திருகோணமலையில்(Trincomalee) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்ட தனது கணவனுக்கு நீதி கோரி பெண் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் நேற்று(08.03.2025) பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குமாரபுரத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு மூதூர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கைது நடவடிக்கை

கிளிவெட்டி, குமாரபுரம் பகுதியில் 24.02.2025 அன்று ஏற்பட்ட விபத்துச் சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் என தேடப்பட்டு வந்த குறித்த நபரே கடந்த வெள்ளிக்கிழமை(07) மூதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், சட்டத்திற்கு முரணான வகையிலும், அடிப்படை உரிமையை மீறும் வகையிலும் தனது கணவர் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்கப்பட்ட தனது கணவனுக்கு நீதி கோரி அவரது மனைவியினால் வெள்ளிக்கிழமை(07) திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தழிழர் பகுதியில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவர்: நீதி கோரும் மனைவி | A Man Attacked By Police In Trincomalee

இதன் பின்னர் குறித்த அதிகாரிகள் கைதான நபரை நேரில் சென்று பார்வையிட்டதுடன் மூதூர் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை : விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை : விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

பாதிக்கப்பட்டவரின் மனைவியின் முறைப்பாடு

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி அளித்த முறைப்பாட்டில், கடந்த 24.02.2025 அன்று குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக தெகிவத்தை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமது கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள்.

இதன்போது தமது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தற்பாதுகாப்பிற்காக திருப்பி தாக்கியதோடு தப்பியும் ஓடினார்கள்.

தழிழர் பகுதியில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவர்: நீதி கோரும் மனைவி | A Man Attacked By Police In Trincomalee

அந்த நேரம் அவ்விடத்திற்கு வருகை தந்த மூதூர் காவல்துறையினர் தெகிவத்தைப் பகுதியைச் சேர்ந்த 4 பேரையும், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிணையில் விடுவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிணையில் விடுவிப்பு

காவல்துறையினரின் முரணான செயற்பாடு

அத்துடன், இரு தரப்பிலும் சிலரை தேடியும் வந்தார்கள். பின்னர் இரு தரப்பினரும் சமாதானமான முறையில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (07) பாலர்பாடசாலையில் பிள்ளையை விட்டு திரும்பி வரும் வழியில் மூதூர் காவல்துறையினர் தனது கணவனை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று எனது கணவரின் தலை, கை, கால் ஆகிய பகுதிகளில் மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

தழிழர் பகுதியில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவர்: நீதி கோரும் மனைவி | A Man Attacked By Police In Trincomalee

30 பேருக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் எமது ஊருக்குள் வந்து தாக்குதல் மேற்கொண்டபோதும் வெறும் 4 பேரை மாத்திரம் கைது செய்து பிணையில் விடுவித்தும் ஏனையவர்களை கைது செய்யாமலும் குமாரபுரம் மக்கள்மீது தமது அதிகாரத்தை பிரயோகித்து ஒரு பக்கச்சார்பாக காவல்துறையினர் நடந்து கொள்வதாகவும் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொண்டைமானாறு தேசிய வெளிக்கள பரீட்சைகளில் பாரிய ஊழல் மோசடி

தொண்டைமானாறு தேசிய வெளிக்கள பரீட்சைகளில் பாரிய ஊழல் மோசடி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024