யாழில் உயிருடன் பிடிபட்ட முதலை கிளிநொச்சிக்கு
Jaffna
Kilinochchi
Sri Lanka
By Raghav
யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு (Neduntheevu) பகுதியில் முதலையொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை (18.07.2025) முதலையொன்று உயிருடன் பிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலை
நெடுந்தீவு, வெட்டுக்களிப் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே குறித்த முதலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 அடி நீளமுடைய குறித்த முதலையானது, நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக குறிகாட்டுவானுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதலையானது கிளிநொச்சி பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி